Tuesday, May 22, 2007

ஐ.சி.சி. குழுவுக்கு மஹேல ஜயவர்தன தெரிவு

கிரிக்கெட் போட்டிகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கும் ஐ.சி.சி. குழுவில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன புதிய உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளார்.

13 பேரை உள்ளடக்கிய இக்குழுவில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான டுலிப் மென்டிஸ், ரஞ்சன் மடுகல்ல, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மாக்டெயிலர், மே. இந்தியத்தீவு அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு வீரர் மைக்கல் ஹோல்டிங் ஆகியோரும் இக்குழுவில் அங்கம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் போட்டியில், தற்போது நிலவும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவது, எதிர்காலத்தில் கிரிக்கெட் ஆட்டத்தை மேம்படுத்துவதுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவதுமே இக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.

இக்குழுவில் இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான குமார் சங்கக்காரவும் அங்கம் வகித்திருந்தார். ஆனால், அவர் தற்போது, இங்கிலாந்தில் பிராந்திய அணிகளிடையே நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதினாலேயே, மஹேல ஜெயவர்தனவுக்கு இச்சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments: