Sunday, May 27, 2007

அரசை விமர்சனம் செய்வோரை கண்காணிக்க விஷேட பொலிஸ் குழு

லங்கை அரசு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது.

உங்களால் அரசின் சரி பிழைகளைக்கூட சுட்டிக்காட்ட முடியாது. அரசாங்கத்தை நீங்கள் விமர்சித்தால், தேசிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி தடுத்து வைக்கப் படுவீர்கள்.

இது விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்தால் மட்டுமல்ல, எதற்க்காகவும் விமர்சிக்கமுடியாது.

அரசாங்கத்தை விமர்சனம் செய்பவர்களை கண்காணிக்க விசேட பொலிஸ் குழுவொன்று அமர்த்தப்பட்டுள்ளது.

இந்தப் பொலிஸ் குழு கடந்த வாரம் முதல் செயல்படத் தொடங்கியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அரசையும் அதன் அபிவிருத்தித் திட்டங்களையும் பாதுகாப்பு நடைமுறைகளையும், சட்ட நடவடிக்கைகளையும் விமர்சனம் செய்யும் அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், ஊடகங்கள், அரச ஊழியர்கள், தொழிற் சங்கங்கள், அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இப் பொலிஸ் குழுவின் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இப்பொலிஸ் குழு சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரியவர்கள் தொடர்பு வைத்திருப்போர், அவர்கள் செல்லும் இடங்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தகவல் திரட்டி பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் தந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

0 comments: