Monday, November 26, 2007

ஆயுதக் கொள்வனவுக்காக குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் டாலர்கள் வழங்கியது இந்தியா!!

ஆயுதக் கொள்வனவுக்காக சிறிலங்காவுக்கு குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் டாலர்கள் வழங்கியது இந்தியா: த நேசன்

சிறிலங்காவின் ஆயுதக் கொள்வனவுக்காக குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கியிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் த நேசனில் வெளியாகியுள்ள செய்தி:
வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களுக்குள் படையினர் ஊடுருவி அதனைக் கைப்பற்றுவதற்கு ஒரு டசினுக்கு மேற்பட்ட முறை பல்வேறு திசைகளில் முயற்சித்த போதும் எல்லாம் தோல்வி கண்டுள்ளன.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் 57 ஆவது படையணியை உருவாக்கிய பின்னர் இராணுவம் இந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.கடந்த வாரம் மணலாற்றுப் பகுதியில் புதிதாக 59 ஆவது படையணி உருவாக்கப்பட்டுள்ளது. இது அங்கு புதிய களமுனை விரைவில் திறக்கப்படலாம் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் ஆனையிறவுத் தளத்தை தாக்கி அழித்து தற்போதைய முன்னணி நிலைகள் வரை கடந்த 2000 ஆம் ஆண்டு முன்நகர்ந்திருந்தனர். எனினும் அப்போது காஷ்மீர் முன்னரங்கில் பாகிஸ்தான் இராணுவத்தினால் பயன்படுத்தப்படும் பல்குழல் உந்துகணை செலுத்திகளை (மல்டிபேர்ரல் ரொக்கெட் லோஞ்சர்கள்) பாகிஸ்தான் வழங்கியது. சிறிலங்காப் படையினருக்கு பாகிஸ்தான் தொடர்ச்சியாக ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றது. எனவே சிறிலங்காவின் அரசாங்கங்கள் பாகிஸ்தானுக்கு நன்றியுடையனவாக இருக்கின்றன.

தற்போதைய மகிந்த அரசாங்கம் பாகிஸ்தானுக்கான தனது மேலதிகமான ஆதரவை கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பொதுநலவாய குழுவில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்றுவது என்ற முடிவை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம ஆதரித்த போதும் முசாரப்புக்கு மகிந்த தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.அதேபோல் முன்னைய அரசாங்கங்களுக்கு அளித்த உதவிகளை விட அமெரிக்கா தற்போதைய அரசாங்கத்துக்கு அதிக படைத்துறை உதவிகளை வழங்கி வருகின்றது.

விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்காக அமெரிக்கா நேரடியான படைத்துறை உதவிகளையும், நேரடியற்ற படைத்துறை உதவிகளையும் வழங்கி வருகின்றது. விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுகளை தடுப்பதற்காக அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகெங்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது.

கடந்த வாரம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களையும் அமெரிக்கா முடக்கியிருந்தது. இது விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்ல முழு தமிழ்ச் சமூகத்திற்கும் விடுக்கப்பட்ட செய்தியாகும்.

இந்திய கடற்படையும், விடுதலைப் புலிகளின் கடற் செயற்பாடுகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை சிறிலங்கா கடற்படையினருக்கு வழங்கி வருகின்றது. இந்திய மத்திய அரசு சிறிலங்கா அரசாங்கத்தின் படைத்துறை கொள்வனவுகளுக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை குறைந்த வட்டியில் வழங்கியுள்ளது. தற்போது தாக்குதல் ஆயுதங்களை வழங்கவும் அது சம்மதித்துள்ளது.

The Indian Navy has been sharing intelligence with its counterparts here, helping destroy several Tiger arms ships. The Central government, which has granted Sri Lanka a US$ 100 million credit line at very low interest, for military purchases, finally agreed to provide certain offensive weapons.

ஆனால் 18 மாதகால போர் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பகுதி மக்களை அது விடுதலைப் புலிகளின் பக்கம் திருப்பியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியும் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார். பல கட்சிகள் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றன.போர் தீவிரமடைந்து 25 வருடங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைய போகின்றது. இந்த காலப்பகுதியில் போரும், சமாதானமும் மாறி மாறி நடைபெற்று விட்டன. இந்த 25 ஆவது வருட நிறைவில் போரானது அதிகளவில் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comments:

selventhiran said...

வணக்கம் மாயாவி அவர்களே,
உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியபடுத்துங்களேன்.

மிக்க அன்புடன்
செல்வேந்திரன்.