Saturday, November 3, 2007

கரீபியன் நாடான ஹெயிட்டில் ஷ்ரீலங்கா படையினர் பாலியல் துஷ்பிரயோகம்!

ஐநா சபை சமாதானப் படையின் ஒரு அங்கமாக கரீபியன் நாடான ஹெயிட்டிக்கு சென்ற ஷ்ரீலங்கா படையினர் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்ப பட்டனர்.

வயது குறைந்த சிறுமிகளுடன் உடலுறவு கொண்டது, விபச்சாரிகளிடம் உறவு கொண்டது, பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற பலகாரணங்களுக்காக நூற்றுக்கும் அதிகமான ஷ்ரீலங்கா படையினர் நாட்டிற்க்குத் திருப்பி அனுப்ப பட்டனர்.

ஐநா பேச்சாளரான மிச்சேல் மொன்டாஸ் கருத்துத் தெரிவிக்கையில்" ஷ்ரீலங்கா வீரர்கள் இது மாதிரியான செயல்களை செய்தது அதிர்ச்சியான கவலைக்குரிய சம்பவம், ஐநா சபையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்" எனவும் தெரிவித்தார்.

"இவ்வாறான செயல்களை ஐநா சபை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ளாது, ஆனால் படையினரை அனுப்பும் நாடே படையினரின் நடத்தைகளுக்குப் பொறுப்பு" என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐநா சபையின் சட்டதிட்டங்களுக்கு அமையவே இவர்கள் தண்டிக்கப் படவேண்டுமென ஐநா கூறிய பொழுது இப்படையினரை ஷ்ரீலங்கா அரசு தாங்கள் தண்டிப்பதாக கூறியுள்ளது.

இதில் பாதிக்கப் பட்ட சிறுமிகளுக்கு ஐநா உதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளது.

மேன்fராட் நோவாக் என்பவர் "ஐநா சபையின் சமாதானப் படைக்கு தெரிவு செய்யும் வீரர்களின் தரம் குறைந்திருப்பதாலேயே இவ்வாறான செயல்கள் நடப்பதாக" குறிப்பிட்டார்.

0 comments: