Monday, November 26, 2007

பாகிஸ்தானை ஆதரிக்கும் முடிவால் இலங்கை - இந்திய உறவில் விரிசல்!!!

பாகிஸ்தானை ஆதரிக்கும் முடிவால் இலங்கை - இந்திய உறவில் விரிசல்!

பொதுநலவாய நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கும் விடயத்தில் இலங்கை எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டால் இந்தியா அதிருப்தியடைந் திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து உகண்டாவிலுள்ள இலங்கை வெளியு றவு அமைச்சக அதிகாரிகள் குழுவுடன் இந்திய வெளி யுறவு அமைச்சக அதிகாரிகள் குழுவினர் கலந்துரையா டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானை ஆதரிக்கும் நிலைப்பாட்டால் இலங் கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரி சல் நிலை ஏற்படும் சாத்தியங்கள் தோன்றியிருப்பதாக இராஜதந்திரிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை அரச உயர்மட்டத்துடன் இந்தியா விரைவில் உத்தியோகபூர்வமாக பேச்சு நடத்த விருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுநலவாய நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கும் விடயத்தில் மலேஷியா மட்டுமே முதலில் எதிர்த்து வாக்களித்தது. பின்னர் இலங்கையும் எதிர்த்து வாக்களிப்பதாக அறிவித்தது. இலங்கையுடன் மிக நெருக்மான உறவுகளை இந்தியா கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானை ஆதரிக்க இலங்கை எடுத்த முடிவானது இந்தியாவை சினம்கொள்ள வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளாராக இந்தியாவின் கமலேஷ் சர்மா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதுவரை காலமும் லண்டனிலுள்ள இந்திய தூதவராக பணியாற்றி வந்த இவர் எதிர்வரும் மார்ச் மாதம் பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்று தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அப்பதவியில் நீடிப்பார்.

0 comments: