Friday, December 21, 2007

அமெரிக்கா மறுப்பு!! இந்தியா அழைப்பு!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகமொன்றை நிறுவுவதற்கு இடமளிப்பது மற்றும் அமைப்புகளும் ஊடகங்களும் நாட்டின் எந்தவொரு இடத்துக்கும் பிரவேசிக்கும் வசதிகளை வழங்குவது உட்பட மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றும்வரை இலங்கைக்கு யுத்த உபகரணங்கள் வழங்குவதை இடைநிறுத்த அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள தீர்மானத்துக்கு இலங்கை அரசு ஒருபோதும் இணங்கிவராது என்று அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

""புலிப் பயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புப் படையினர் யுத்தம் செய்கையில் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அடிபணிவதற்கு ஒருபோதும் முடியாது'' என அரசின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

வளைகுடா யுத்தத்தின்போது குவைத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட அமெரிக்க ஊடகங்கள் எந்தவொரு இடங்களுக்கும் செல்வதற்கு அமெரிக்க இராணுவம் இடமளிக்கவில்லை. அந்த நிலையில் அமெரிக்கா இந்நாட்டில் பயங்கரவாதிகள் இருக்கும் பிரதேசங்களுக்குப் போவதற்கு இடமளிக்குமாறு கோருவது கேலிக்குரியது'' என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா இந்நாட்டுக்கு யுத்த உபகரணங்களை விற்பனை செய்வதை நிறுத்துவதால் இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாதெனவும் அவர் கூறினார்.

""அண்மையில் அமெரிக்கா இந்நாட்டுக் கடற்படைக்குத் தாக்குதல் ஆயுதமற்ற 10 படகுகளை வழங்கியது. அது குதிரையைக் கொடுத்து கடிவாளத்தை வழங்காத நடவடிக்கையாகும்".

"அமெரிக்காவின் யுத்த உபகரணங்களுக்குப் பதிலாக ஐந்து நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன'' என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை விமானப்படையை இந்திய விமானப்படையுடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்திகை பார்க்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அமைதி நிலவக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருந்து வருவதாகவே தெரிகிறது.

அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் அயல்நாடுகளில் யுத்தத்தை ஊக்குவிக்கிறது. காலச்சுழற்சியில் அதன் பலனை இந்தியாவிலேயே அறுவடை செய்யும்.

வாழ்க இந்தியா!

0 comments: