Thursday, June 21, 2007

இலங்கை இராணுவத்திற்க்கான நிதி ஒதுக்கீடு.












2005 ஆம் ஆண்டுக்கான கல்விக்கான செலவீனமானது வெறுமனே 26 பில்லியன்களே ஆகும். அதே ஆண்டு சுகாதாரத்திற்கான செலவீனம் 30 பில்லியன் ரூபாவே ஆகும். ஆயுதக் கொள்வனவுக்கான பணத்தை இவ்விரு துறைகளுக்கும் பயன்படுத்தியிருந்தால் எந்தளவு தூரம் அபிவிருத்தி கண்டிருக்க முடியும் என்பதை உணரலாம்.


இலங்கையில் எழுத்தறிவு 90 சதவீதம் என்று கூறிக்கொண்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை பாடப்புத்தக பற்றாக்குறை, நல்ல பாடசாலைகளுக்கான வசதி இன்மை போன்ற ஏராளமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதே மாதிரியான பிரச்சினைகள் சுகாதாரத் துறையிலும் இருக்கிறது. அரசாங்க வைத்திய சாலைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதுடன், சிறந்த மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதிலும் சிரமங்கள் எதிர் நோக்கப்படுகிறது. இவ்வாறு சமூக ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற அதே மக்கள் தான் இராணுவ செலவீனத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டிய துரதிர்ஷ்டமான நிலைமை இருக்கிறது.


இத்தகைய செலவீனங்களின் பின்னணியில் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்குமானால், இறுதியில் சிங்கள மற்றும் தமிழ் மக்களே இழப்பாளிகளாக இருப்பர். சிறுவர்கள், கல்வி ரீதியாக பாதிக்கப்படுவதுடன், சுகாதாரம், போக்குவரத்து உட்பட சகல துறைகளிலும் நாடு பெரும் பின்னடைவை சந்திக்கும். இந்த நாடு, இராணுவ செலவீனத்திற்குள் சிக்குப்பட்டு, அதல பாதாளத்திற்குள் வீழ்வதை தடுப்பதற்கு, இந்த நாட்டு மக்கள் காத்திரமான ஒரு பாத்திரத்தை வகிக்க வேண்டும். அவர்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்கக் கூடாது.

0 comments: