Thursday, August 2, 2007

மிகப்பெரிய அமைச்சரவையை சமாளிக்கவே கப்பம் அறவிடப்படுகிறது - ஜனாதிபதி

அரசாங்கத்தின் மிகப் பெரும் அமைச்சரவையை சமாளிப்பதற்காகவே தமிழ் மற்றும் முஸ்லீம் வர்தகர்களிடம் இருந்து கப்பம் அறவிடப்படுவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் பிரபல முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய முஸ்லீம் அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைத்து உங்கள் பயணத்திற்கு முச்சக்கர வண்டி ஒன்றை ஒழுங்கு செய்து தந்தால் தொடர்ந்தும் அமைச்சு பதவி வகிக் முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தின் மூலம் பெறக் கூடிய அதி உச்ச பயன்களை அமைச்சர்கள் அனுபவித்து வருவதாகவும் 107 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை சரிவர நிர்வகிப்பதற்கு மாற்று வழிகள் மூலம் பணத்தை பெற வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி அந்த அமைச்சரிடம் கூறியள்ளார். ஜனாதிபதியின் பதிலை அடுத்து முஸ்லீம் அமைச்சர் மௌனமாக அங்கிருந்து வெளியேறி தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து நெருக்கமானவர்களிடம் கவலையுடன் விபரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிலை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையகத்தை சேர்ந்த தமிழ் அமைச்சர் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மிகப்பெரிய அமைச்சரவை காரணமாக அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடி நிலைக்குள்ள தள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் துணை ஆயுதக் குழுக்களின் பராமரிப்பிற்கான நிதியினை வழங்க முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ் மற்றும் முஸ்லீம் வர்த்தகர்களிடம் இருந்து கப்பமாக பணத்தை அறிவிட்டு தமது தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரசாங்கம் துணை ஆயுதுக் குழுக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை இலங்கையின் பொருளாதாரத்தில் தமிழ் மற்றும் முஸ்லீம் வாத்தகர்கள் கொண்டுள்ள ஆதிக்கத்தை குறைத்து வர்த்தக செயல்பாடுகளை சிங்களவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் இனச் சுத்தீகரிப்பும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைக்கால கடத்தல் மற்றும் கப்பம் பெறும் நடவடிக்கைகளால் தமிழ் மற்றும் முஸ்லீம் வர்தகர்கள் பலர் தமது வியாபார நடவடிக்கைகளை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தொடர்ந்தும் பலர் வெளியேறுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறியதை அடுத்து அனைத்துலக நாடுகளை சமாதானப்படுத்தும் நோக்கில் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு பிரிவினரை கைது செய்து அனைத்திற்கும் அவர்களே காரணம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தமது சதி முயற்ச்சியை அரசாங்கம் மூடி மறைக்க முற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.