Friday, June 12, 2009

ஞானி ஏன் என்னோட எல்லா விபரத்தையும் கேக்குறாரு!!

ஞானி ஏன் என்னைப்பத்தி எல்லா விசயத்தையும் கேக்குறாரு?


அண்மைகாலமாக இணையத்தில் சில வலைப்பக்கங்களில் ஏதாவது வாசிக்க, தேட அல்லது தரவிறக்க வேணும்னா நம்மளப் பத்தி விபரங்களை பதிவு செய்து வலைப்பக்கத்தில் உறுப்பினராகும்படி கேக்குறாங்க.

வங்கி, வருமானவரி, கிரடிட்கார்ட் அல்லது இது மாதிரியான மிக முக்கியமான தளங்களில் எங்களைப் பத்திய விபரங்களை பதியுறது ஏதும் தவறில்லை.

ஆனால்!!!

அண்மையில் ஞானியின் வலைப்பக்கத்தில் வாசிக்கலாம் அப்படீன்னு போனா!! ஆணா, பெண்ணா, பிறந்த திகதி, ஊரு, அட்ரஸ், வீட்டு போன் நம்பர், மொபைல் நம்பர்............எல்லாம் கேக்குறாரு. பேசாம பக்கத்தை மூடீட்டேன்.

எல்லோரும் வாசிக்கனும் அப்படீன்னுதான் வலைப்பக்கத்திலேயே எழுதுறீங்க, அப்புறம் எதுக்கு வாசிக்க வர்றவங்களோட சொத்துவிபரம் வரைக்கும் கேட்டு உயிரை வாங்குறீங்க??

அண்டவேர் கலர் வரைக்கும் சொன்னாதான் வாசிக்க விடுவோம் அப்படீன்னா, வாசிக்கவே வரல.

பொய்யா ஒரு பெயரையும், ஊரையும் கொடுத்து பதிவு செஞ்சு வாசிச்சிருக்கலாம், ஆனா நமக்கு அது சரிவராது.

உலகம் முழுக்க பாப்புலரான "டிவிட்டர்"லேயே இது ஒன்னும் கேக்கிறது இல்லை.

ஞானி இந்த விபரங்களை எல்லாம் வச்சு என்ன செய்ய போறாரு? ஒருவேளை இந்த விவரங்களை எல்லாம் காசுக்கு விக்கலாம் அப்படீன்னு பிளான் வச்சிருக்காரோ என்னவோ!!

நீங்க எழுதுறத எல்லாரும் வாசிக்கனும்னா பேசாம, பேரையும் ஈமெயில் ஐடியையும் வாங்கீட்டு வாசிக்கவிடுங்க, இல்லன்னா இன்னும் கொஞ்சநாள்ல வலையில நீங்க எழுதுனத நீங்களேதான் வாசிக்கவேண்டியிருக்கும்!!