Tuesday, May 12, 2009

தயவு செய்து இதைப் பார்த்துவிட்டு வாக்களிக்கச் செல்லுங்கள்!!

தயவு செய்து இப்படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் மனசாட்சியின்படி வாக்களியுங்கள்.


சோமாலியாவைவிட மோசமாக இன்று வன்னியில் தமிழர்களின் நிலை.


காலம் காலமாக உழைத்து உயர்வாக வாழ்ந்த ஒரு இனம் இன்று தனது மண்ணிலேயே அகதியாக ஒரு நேர உணவுக்கு கையேந்தி நிற்க்கும் கொடுமைக்கு தமிழினத்தலைவர் என பட்டம் சூட்டிக்கொண்ட கருணாநிதியும் ஒரு காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.


உண்ணாவிரதம் / போர்நிறுத்தம் என்ற பெயரில் கலைஞரின்
நாடகம்.

எப்படியாவது வாக்குகளை வாங்கிவிட வேண்டும் என்று திமுக/காங்கிரஸ் கூட்டணி தலைகீழாக நிற்பது எல்லோருக்கும் தெரியும்.

வாக்களிக்க பணம் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிக் கொள்ளுகள். முடிந்தால் இன்னும் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் மனசாட்சியின்படி உங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்யக்கூடிய ஒருவருக்கு வாக்களியுங்கள்.

வாங்கிய பணத்தின் மீதோ பாலின் மீதோ சத்தியம் பண்ணச் சொன்னால் தைரியமாக பொய் சத்தியம் பண்ணுங்கள்!!! (வேண்டுமானால் மனதிற்க்குள் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்)

கடவுள் இதற்கெல்லாம் வந்து கண்ணைக் குத்தமாட்டார்.!!! உண்மையிலேயே கடவுள் சந்தோசப்படுவார். இவர்களிடம் உள்ள பணத்தை இப்படித்தான் கறக்க வேண்டும். கடவுள் என்பது மிக அற்புதமான விஷயம். இந்த மாதிரி தேர்தல் திருடர்களை தண்டிப்பது ஒன்றும் சாமி குற்றமாகாது.

நீங்கள் அதிஷ்டசாலியாக இருந்தால், தேர்தலுக்கு முதல் நாள் உங்கள் தொகுதி வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டால் உங்களுக்கு மீண்டுமொருமுறை பணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது!!. மதுரை, ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்களுக்கு மீண்டும் பணம் கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கிறது. முடிந்தால் தேர்தல் ஒத்திவைப்புக்கோ அல்லது ஒரு இடைத்தேர்தலுக்கோ கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்


இன்று, இன்று மட்டுமே உங்கள் கையில் இருக்கக்கூடிய பலமான ஆயுதம் உங்கள் வாக்கு. அதை சரியாக பயன் படுத்துங்கள்.


இன்று எமது இனத்திற்க்காக நாம் குரல் கொடுக்காவிட்டால், நாளை எமக்காக குரல் கொடுக்க யாருமே இருக்கமாட்டார்கள்!!!







4 comments:

Anonymous said...

நான் ஏற்கெனவே ரெண்டு கட்சியிலயும் காசு வாங்கீட்டேன். யாருக்கு போடுறதுன்னு இன்னும் முடிவாகல

Unknown said...

பார்க்கலாம். நாளை எப்படி என்று.
மனசாட்சியுள்ள எவனும் திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்

Unknown said...

இவனுங்க மண்டையை போட்டானுங்கன்னா சந்தோசம். இல்லாட்டி இவனுங்க மண்டையில யாராவது போட்டாலும் சரி, அது இதவிட சந்தோசம். இன்னொரு எலக்ஸன் வரும். கொஞ்சம் காசு பாக்கலாம்.

மாயாவி said...

நன்றி உண்மை, முருகதாஸ்.

தயவு செய்து நாளை எமது தமிழினத்தை மனதில் வைத்து வாக்களியுங்கள்.